சிறப்பாக இடம் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர்த்திருவிழா.
பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை அபிசேகங்கள் இன்று புதன் கிழமை (3) காலை இடம் பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கல் தலைமையில் விசேட பூஜை அபிசேகங்கள் இடம் பெற்றது.
குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி கலந்து கொண்டிருந்தனர்.