Mon. May 20th, 2024

சிகையலங்கரிப்பு நிலைய மேனேஜர் அடித்து கொலை .

சிலேவ் ஐலன்ட் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தின் முகாமையாளர் நேற்றிரவு அடித்து கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் நின்ற இளைஞர்களுக்கும் முகாமையாளருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால், இளைஞர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் மரணமடைந்ததாகவும் தெரிகின்றது. முகாமையாளர் தனது பெண்தோழியுடன் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு வந்தபொழுது இளைஞர்கள் பெண்தோழியையும் அவரையும் நையாண்டி பண்ணியதாலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது.
அப்பகுதியில் இருந்த விமானப்படை வீரர்களால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்