Fri. May 17th, 2024

சாருஜனின் அபார கோல், இறுதியில் மனோகரா

கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் அல்வாய் மனோகரா அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதன் அரையிறுதியாட்டம் நேற்று சனிக்கிழமை இமையாணன் மத்தி இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதியாட்டத்தில் அல்வாய் மனோகரா அணியை எதிர்த்து வதிரி டைமன்ஸ் அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போட முடியவில்லை. இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் மனோகரா அணி வீரர் சாருஜன் இரு கோல்களைப் போட ஆட்ட நேர முடிவில் அல்வாய் மனோகரா அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்