சவுக்குமரம் வெட்டிய 13 பேர் கைது
சவுக்குமரம் வெட்டிய குற்றச் சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3கன்ரர் வாகனமும் பொலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் சற்று முன்னர் மணற்காடு பகுதியில் நடைபெற்றது. மணற்காடு பகுதியில் சவுக்குமரம் வெட்டிய 13 பேரை பருத்தித்துறை பொலீஸார் கைது செய்துள்ளதுடன், 3 கன்ரர் வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், நல்லூர், மானிப்பாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.