Fri. May 17th, 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் போராட்டத்தில் குதித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி ன் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்தின் 1008வது நாளும் இன்றாகும் என்பதால் பாரியளவில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பேரணியாக சென்று செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மகஜரொன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்