சம்பிக்க ரணவக்கவின் விளக்கமறியல் 24 ஆம் திகதி வரை நீட்டிப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை இன்று மீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் கொழும்பு தலைமை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட பொழுது அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.