சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை கொடு! யாழ்.நகரில் போராட்டம்.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரன்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில்
அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.