Tue. May 21st, 2024

சஜித்தின் தோல்விக்கு மஹா சங்கத்தை குற்றம் கூறிய மங்கள மற்றும் ரஞ்சன் பொறுப்பேற்கவேண்டும்

சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு முக்கிய காரணம் மகா சங்கத்தினர் மீதும் பௌத்தர்கள் மீதும் அவதூறு செய்தமையாகும் என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லாதெரிவித்துள்ளார்
பௌத்த சமூகத்தால் ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கபட்டமைக்கு ,மகா சங்கத்தின்மீது மங்கள சங்கரவீரா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் அவதூறு தெரிவித்தமையே காரணமாகும்
துறவிகள் மீது தொடர்ந்து விமர்சிக்கப்படுவதும், கட்சித் தலைவர்கள் அவர்களைத் தடுக்கத் தவறியதும் கடுமையான குறைபாடு என்று அவர் மேலும் கூறினார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியில் அமரும் என்று அவர் கூறினார்.

பௌத்த துறவி ஒருவரை முன்னாள் அமைச்சர் கிரியேல்லா” பறை நாயே” என்று கூறி எதிர்ப்பை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அணைத்து பௌத்த துறவிகளும் சிறுபிள்ளையாக இருந்த பொழுது துறவிகளால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டனர் என்று கூறி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் கிரியெல்ல சஜித்தின் பிரச்சாரத்தில் ஒதுங்கி இருந்ததுடன் அவர் வெற்றி பெறுவதை விரும்பாத ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்