கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகளை முப்படையினரின் தனிமை படுத்தலுக்காக
யாழ்ப்பாணம் இராசபாதவீதி கோப்பாயில் அமைந்துள்ள கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகளை கொரோனா கண்காணிப்பு மையமாக பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அந்தப் பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டிருப்பதால் அசாதாரண சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
கல்வியியற் கல்லூரியின் விடுதிகளில் இருந்து உடைமைகளை அகற்றுமாறு மாணவர்களுக்கு கல்லூரி சமூகத்தினால் தெரிவிக்கபட்டிருக்கின்றது. இதேநேரத்தில் இராணுவ வாகனங்கள் சிலவும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்றன.
கல்வியியற் கல்லூரியின் விடுதிகளில் பயன்படுத்தப்படுகின்ற கழிவு நீர் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்குள்ளும் வருவதால் கொரோனா தொற்றாளர்கள் அங்கு இருந்தால் தமக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதேவேளை இராணுவத்தினருக்கு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள விடுதிகளுக்குள் தாமும் செல்ல அனுமதியில்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.