கோத்தபாயவின் வழக்கின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச – வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்
கோத்தபாயாவுக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமை மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கழத்தில் அவருடைய கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டை தொடர்பாக முறையீடு செய்ததன் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவே பின்னணியில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்பம் முதலே கோத்தபாயவின் ஜனாதிபதி கனவை எதிர்த்து வந்த மஹிந்த ராஜபக்ச , சமல் ராஜபக்சவை போட்டியிட செய்யவே விரும்பி வந்ததாகவும் கோத்தபாயவின் பிரபல்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக கடைசிநேரத்தில் ஒப்பு கொண்டிருந்தார். இருந்த போதிலும் கோத்தபாய தான்தோன்றி தனமாக எடுத்துவரும் நடவடிக்கையால் பயந்து போயுள்ள ராஜபக்ச , தனக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தி ரகசிய சட்டநடவடிக்கை மூலம் அவருக்கு தடை ஏற்படுத்த முயற்சிகள் செய்வதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது .
கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமை கடிதத்தில் மஹிந்த ராஜபக்ச கையெழுத்து இட்டத விடயம் அவர்களுக்கு நெருக்கமானவர்களை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது என்றும் , இந்த விஷயம் வெளியில் வந்ததில் மஹிந்த ராஜபக்சவின் சாதி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது