கொழும்பில் திடீரெனெ உயிரிழந்த தனியார் ஊடகத்தில் பணிபுரியும் தமிழ் பெண்
கொழும்பில் தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குறித்த பெண் நேற்றைய தினம் ஊடக நிறுவனத்துக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபின்னர் உடலில் வலி ஏற்பட்டநிலையில் கணவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருக்கிறது .
. கண்டி புசல்லாவையை சொந்த இடமாகக் கொண்ட குழந்தைவேல் சந்திரமதி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் கொழும்பு தனியார் ஊடகத்தில் செய்திப்பிரிவின் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்கனவே வலிப்பு இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.