Fri. May 17th, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணி இறுதியில்

கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் கழகங்களுக்கிடையிலான பரபரப்பான  காற்பந்தாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் நேற்று இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணியை எதிர்த்து இமையாணன் மத்தி இளைஞர் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தின் 13வது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணி வீரர் மாதவன் முதலாவது கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணி 1:0 என்ற கோலைக் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இமையாணன் மத்தி இளைஞர் அணி வீரர்கள் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக 35வது நிமிடத்தில் டிவின்சன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதிலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கொற்றாவத்தை றேஞ்சஸ் இளைஞர் அணி 4:3 என்ற கோல்க் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்