Fri. May 17th, 2024

கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி இறுதியாட்த்திற்கு தகுதி

ஈழவேந்தனின் சிறப்பான கோலின் மூலம் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி இறுதியாட்த்திற்கு தகுதி பெற்றுள்ளது.
மறைந்த வீரர் திசாந் ஞாபகார்த்தமாக நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் திசாந் நற்பணி மன்றம் நடாத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையேயான 23 வயதிற்குட்பட்ட வீரர்களிடையேயான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதியாட்டம் நவிண்டில் கலைமதி விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரையிறுதியாட்டத்தில்  கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து  பொலிகை பாரதி  அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடத்தினர். இருப்பினும் ஆட்டத்தின் 30 வது நிமிடத்தில் ஈழவேந்தன் தனக்கு கிடைத்த பந்தினை நேர்த்தியான முறையில் கோலாக்க 1:0 என்று முன்னிலையானது றேஞ்சஸ் அணி . இறுதிவரை இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இரு அணிகளாலும் மேலதிக  கோல்களை பெற முடியவில்லை. இதனால்  ஆட்ட நேர முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் ஈழவேந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்