கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 660 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 139 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.