Fri. May 17th, 2024

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 198ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ்) தொற்றுள்ள மேலும் ஒருவர் இன்று 11/4 சனிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 198ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் இன்று சனிக்கிழமை 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

54 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

137 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 165 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்