கொடிகாமம் பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் 3பேர் கைது
கொடிகாமம் பிரதேசத்திற்கு உட்பட்ட மந்துவில் பகுதியில் வாள், கத்தி என்பவற்றை வைத்திருந்ததாக சந்தேக நபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(10) மதியம் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது இரண்டு அடி நீளமான வாள் மற்றும் கத்தி என்பவற்றுடன் வாள் செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.