கைதடி தென்கிழக்கு விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசில் நாள் நிகழ்வும்
கைதடி தென்கிழக்கு விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசில் நாள் நிகழ்வும் 28/12/2019 சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது
முன்பள்ளியின் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி ரவீந்திரன் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சிறப்பு விருந்தினர்களாக கைதடி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் நா.கருணாகரன் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்
செ பிரதாப் கௌரவ விருந்தினர்களாக கைதடி தெற்கு கிராம அலுவலர் செல்வி வி.நியுறிசா உவரி மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி மு.குகனேஸ்வரி சாய்ராம் கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியத் தலைவர் இ கந்தசாமி முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற (167 புள்ளிகள்) மாணவன் கஜேந்திரன் நிதுசன் மற்றும் 2020 ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.