Fri. May 17th, 2024

குறிஞ்சிக் குமரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பரபரப்பான ஆட்டத்தில் குறிஞ்சிக் குமரன் அணி வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவர் அமரர் நவரட்ணராஜா ஞாபகர்த்தமாக வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட தலைவர் கிண்ணம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியாட்டத்தில்
குறிஞ்சிக்குமரன் அணியை  எதிர்த்து கூவில் சிவானந்தா அணி மோதியது. இதில் குறிஞ்சிக்குமரன் அணி வீரர் றசிந்தன் ஒரு கோலைப் பதிவு செய்ய சிவானந்த அணி வீரர் டனிசன் ஒரு கோலைப் பதிவு செய்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் குறிஞ்சிக் குமரன் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்