கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் பௌத்த விகாரை மாத்திரம் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது ஐந்தே சம்பவத்தின் மூலம் தமிழ் மாணவர்கள் மீது பழிபோடுவதற்காக நயவஞ்சக எண்ணத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது பொலிஸாரின் விசாரணைகளின் பின்பே தெரியவரும் என்று எமது நியூ தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்