Sun. May 19th, 2024

கிளிநொச்சி இரணைமடு மீனவர்களுக்கு டக்ளஸ் உதவி

இரணைமடு நன்னீர் மீன்வளர்ப்பு நீர் ஏரியின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை காணும் முகமாக விஜயம் செய்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா பிரதேச மீன்பிடி தொழிலாளர்களுக்கு வலை மற்றும் மிதக்கும் அங்கிகளை வழங்கி வைத்தார் .

இதே நேரம் இரணைமடு நன்னீர் மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய அவர் மேற்கொண்ட நடவடிக்கையினால் குளக்கட்டுக்கு வலை போடும் செயற்பாடும் நேற்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, மழை காலங்களில் அணைக் கட்டுக்களின் மேலாக வழிந்தோடும் நீரோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படுகின்ற மீன்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இச் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கடற்தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் இருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்