Thu. May 16th, 2024

கிளிநொச்சியில் வாள்வெட்டு 11 பேர் காயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூலாவடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

வீதியால் சென்ற  வாகனமொன்று மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ,இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 11 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்