Fri. May 17th, 2024

காலாவதியான அரிசியுடன் யாழ் சென்ற லொரி கைப்பற்றல், இருவர் கைது

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற லொறியொன்றில் காலாவதியான அரிசி மூடைகளை எடுத்துச்சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொட்டவெவ இராணுவ சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மேற்படி லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

“அத்தியவசிய சேவை” எனப் பொறிக்கப்பட்ட காலாவதியான 400 கிலோகிராம் அரிசி மூடைகள் எடுத்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மொரவெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டி.ஜே. இந்திக சம்பத், பொலிஸார் இணைந்து மேற்படி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாரதி , புத்தளம், தெவன செதபுங் கனுவ, சஹீரா கதவுற, பகுதியைச் சேர்ந்த எம்.ஹூசைன் முகம்மது சர்ராஜ் (29) என பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட அரிசியுடன் சந்தேகநபர் வாகனத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்