கரவெட்டி பிரதேச இளைஞர் சம்மேளன அணி சம்பியன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட 34வது ஆண்டு ரூபவாஹினி கரப்பந்தாட்ட போட்டியில் கரவெட்டி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் மன்றத்தின் பெண்கள் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். இதன் இறுதியாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆவரங்கால் மத்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட பெண்கள் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச இளைஞர் அணியை எதிர்த்து கோப்பாய் மத்தி அணி மோதியது. முதல் செற்றில் கரவெட்டி பிரதேச இளைஞர் அணி பலத்த போராட்டத்தில் 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது செற்றில் ஆதிக்கம் செலுத்திய கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் சம்மேளன அணி
25:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.