கரவெட்டியில் கத்திக் குத்து ஒருவர் காயம்
கரவெட்டிப் பகுதியில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் சற்று முன்னர் கரவெட்டி இராஜகிராமம் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த மணியம் பிரதீஸ் (வயது 33) என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு நாரிப் பகுதியில் ஆழமாக கத்திக் குத்தியதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.