கரணவாய் கிழக்கு வேதாரணிஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலையில் திருட்டு
கரணவாய் கிழக்கு வேதாரணிஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அறை உடைக்கப்பட்டு லேப்டாப் மற்றும் பிரிண்டர் உபகரணங்கள் களவாடிச் சென்றுள்ளார்கள் என்று பாடசாலை அதிபரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு நெல்லியடி பொலிசாரினால் துரித விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. களவு எடுத்தவர்கள் இதுவரை பிடிபடவில்லை என்றும் போலீசார் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டு உள்ளார்கள்.