கஞ்சாவுடன் துன்னாலையில் ஒருவர் கைது
01.10.2020 இன்று நெல்லியடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை முனியப்பர் கோயில் அருகாமையில் உள்ள ஒரு பகுதியில் 10 கிராம் கஞ்சாவுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய கைது செய்யப்பட்டவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆறாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.