கச்சான் , சோளம் இறக்குமதிக்கு தடை , விரைவில் அதிகரிக்கவுள்ள விலை ?
எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் நிலக்கடலை (கச்சான் ) மற்றும் சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் விவசாயிகளுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுப்பதாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இவற்றின் விலையில் பாரிய மாற்றம் விரைவில் ஏற்படலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது.