Fri. May 17th, 2024

ஒரு மதத்திற்கு போதுமான எரிபொருளை சேமிக்க புதிய தொட்டிகள் (FUEL TANK)

இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசி) ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருளை சேமிக்க புதிய தொட்டிகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

இப்பொது இருக்கும் எரிபொருள் சேகரிக்கும் தொட்டிகள் மூலம் இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷனால் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருளை வழங்க முடியாது என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி, பயணிகள் போக்குவரத்து மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீரா குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக புதிய குழாய் அமைத்து வருவதாகவும், எரிபொருளை கொண்டு செல்லும் பவுசர்களுக்கு பதிலாக ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலிய கார்ப்பரேஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு வெளிநாட்டிலிருந்து ஒரு என்ஜின் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், தனது பதவிக் காலத்தில், நுகர்வோருக்கு உயர்தர எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்