இளைய தளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் தனது புதிய படத்திற்கு கேப்மாரி எனப் பெயரிட்டுள்ளார்.
இது இவரின் 70வது படமாகும். முன்னைய காலங்களில் புரட்சி படங்களை மக்களுக்கு வழங்கும் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
கேப்மாரி படம் ஒரு இளைஞன் 4 பெண்களுடன் போடும் ஆட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தொட்டுக்காட்டும் படமாக இம்மாதம் வெளிவரவிருக்கிறது. இதில் ஜெய், அப்துல்யா, பைரவி மற்றும் சித்தார்த் பிவி ஆகியோர் நடிக்கின்றனர்.
புரட்சி இயக்குநராக இருந்தவர் தற்போது இளைஞர்களுக்கான இயக்குநராக மாறியது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், தற்போது இளைஞர்கள் தான் அதிகளவில் திரையரங்கிற்கு வருகிறார்கள். ரத்தக்கண்ணீர் படம் ஒரு இளைஞன் வாழ்க்கை எப்படி வாழக் கூடாது என்பதை காட்டுவது. இப்போதைய இளைஞர்கள் பலர் போடும் அட்டகாசம் அவர்களுக்கு ஏற்படுத்துப் பின் விளைவை தெரிவதில்லை. தற்போது அதனைப் புரிய வைக்கவே இந்தப் படம். ஆங்கிலத்தில் கேப் மாறி (தொப்பி மாறி) அதாவது பிரட்டிக் கதைப்பது இதைத்தான் தற்போது கெட்ட வார்த்தை ஆக்கிவிட்டார்கள்.
இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் படம்மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் படம் என்றார்.