எரிபொருள் நிரப்பு நிலையம் மீள திறக்கப்பட்டது.
இமையாணன் புறாப்பொறிக்கி சந்தியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று மீளவும் திறக்கப்பட்டு தனது சேவையை ஆரம்பித்துள்ளது. RDA நிறுவனத்தில் பணிபுரியும் அம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்ற கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகள் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. நேற்று இமையாணன் புறாப்பொறிக்கி எரிபொருள் நிரப்பு நிலைய மூடப்பட்டது. குறித்த தினத்தில் கடமையாற்றிய ஊழியர்களை தவிர்த்து வேறு ஊழியர்கள் கடமையாற்றுவதாக கரவெட்டி சுகாதார பிரிவினருக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து மீளவும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.