எம்.கே.சிவாஜிலிங்கம் வீடு திரும்பினார்
தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் நலமுடன் இன்று வீடு திரும்பியுள்ளார்.கடந்த 10ம் திகதி
வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அவர் பூரணமாக குணமடைந்த நிலையின் இன்று வீடு திரும்பியுள்ளார். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழர் என பலரும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, நோயிலிருந்து விடுபட வேண்டும் என பலரும் இறைவழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.