எந்தவித தளர்த்தலும் இல்லாமல் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை
தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை தொடரும் என்றும் முன்னர் அறிவித்த படி மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படாது என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதி மற்றும் கோவிட் -19 பணிக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, ஜூன் 07 வரை நீட்டிக்கப்பட்ட பயண காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை எடுக்க அனுமதிக்க மே 25, 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அரசு கூறியது.
அத்தியாவசிய பொருட்கள் பிரதேச செயலகத்துடன் இணைந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலம் வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .5,000 விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்