எதிர்வரும் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்று பாராளுமனற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ராகமவில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவ்வாறு செய்தால் அவர் ‘சமகி ஜன பலவேகயா’ கீழ் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்
இருப்பினும், அவர் விரும்பினால் விக்ரமசிங்க தனியாக போட்டியிடலாம், என்றும் பொன்சேகா மேலும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் மௌனத்தில் ஒரு ஆர்வம் இருந்தாலும், பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல ஒப்பந்தங்கள் அவருடன் எட்டப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்
கட்சியின் தலைவராக புதிய கூட்டணியான ‘சமகி ஜன பாலவேகயா’ ஆரம்ப நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள வேண்டும் என்று பொன்சேகா கூறினார்.