வெலிகமவில் துப்பாக்கி பிரயோகம்!!
வெலிகம மிரிஸ்ஸ வீதி வீடு ஒன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.