உலக கராத்தே காட்டா போட்டியில் வரணி மாணவனுக்கு தங்கம்
World karate master Association நடாத்திய காட்டா போட்டியில் வரணிக் கிளை தற்காப்புக் கலையக மாணவன் ரி.பாலகிருஷ்ணன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இப்போட்டி அண்மையில் இணைய வழியில் நடைபெற்றது. 12 நாடுகள் பங்குபற்றிய திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டியில் வரணி தற்காப்பு கலையக மாணவன் ரி.பாலகிருஷ்ணன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆசிரியர்களான ரட்ணசோதி, கமலேந்திரன் ஆகியோருடன் படத்தில் காணப்படுகின்றனர்.