உயிர் ஆபத்துள்ள பாதினி செடிகள் வெட்டி அகற்றப்பட்டது
இன்று கரணவாய் இந்து மயானபகுதியில் உள்ள பாதினி செடிகளை அகற்றும் நோக்கில் சிரமதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டது J. 350 கரணவாய் கிராமசேவையாளர் தயானந்தன் தலைமையில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் உப தவிசாளர் பொன்னையா மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இளைஞர்கள் கலந்து கொண்டு பாதினி செடிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்று காலையிலிருந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்கள் மற்றும் பத்திரிகையில் வந்த செய்தியை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூஸ் தமிழ் இணையதளமும் பொதுமக்களின் கோரிக்கையாக இந்த செய்தியை பிரசுரித்தது.