உயர்தர பரீட்சை காலத்தில் ஆரம்ப கல்வி உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
க.பொ.த.உயர்தர பரீட்சை நடைபெறும் காலங்களில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே.பெரேரா அறிவித்துள்ளார்.
க.பொ.த.உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட போதிலும் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு முன்னுரிமை வழங்கி எதிர்வரும் 7ம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 6திகதி வரை ஆரம்ப பிரிவிற்கும், ஆரம்ப பாடசாலைகளுக்கும் குறித்த காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.