Fri. May 17th, 2024

இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தெரிவில் வவுனியா மாவட்ட 4 வீராங்கனைகள்

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை தேசிய அணிக்கான தெரிவில் வவுனியா மாவடத்தை பிரதிநிதித்துவம் செய்த 4 வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு வீராங்கனைகளினை தெரிவு செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாகாணங்களிலும் வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் தேசியமட்ட தெரிவு இடம்பெறவுள்ளது. அந்த வகையில் வடமாகாண அணியில் தெரிவு செய்யப்பட்ட 11 வீராங்கனைகளில் வவுனியா மாவட்டம் சார்பாக யங்ஸ்ரார் கழக வீராங்கனைகளான, துவாரகி, வ/நெளுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த செ.மதுமிதா, வ/சிவப்பிரகாச வித்தியாலயத்தை சேர்ந்தவர்களான சே.ரூபிகா, தி.புவிகா ஆகியோர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்