இறுதியில் துப்புரவு செய்யப்படும் நெல்லியடி கழிவுநீர் கால்வாய்கள்
நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள கழிவு தண்ணி ஓடும் வாய்கால் மழைநீர் தேங்கி நிற்பதனால் அப்பகுதியில் உள்ள பலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நியூ தமிழில் இணையதளத்தில் நாங்கள் பலமுறை செய்தி வெளியிட்ட நிலையில், இன்று 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் நேரடி கண்காணிப்பில் துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஊழியர்களயும் துப்புரவு பணிக்கு தருமாறு கேட்ட பொழுது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தன்னிடம் ஊழியர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். ஊழியர்கள் பற்றாக்குறை என அவர் காரணம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.