Fri. May 17th, 2024

இறுதிக்குள் மனோகரா அணி

அல்வாய் மனோகரா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமராட்சி லீக் மற்றும் பருத்தித்துறை லீக் அணிகளுக்கிடையிலான இளையோருக்கான வெற்றிக்கிண்ணத்தின் அரையிறுதியாட்டம் நேற்று இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் அரையிறுதியாட்டத்தில் அல்வாய் மனோகரா அணியை எதிர்த்து யங்லயன்ஸ் அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் அல்வாய் மனோகரா அணியினரின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது. இதனால் சுயாந் மற்றும் அஸ்வின் ஆகியோரின் கோல்களினால் அல்வாய் மனோகரா அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் மேலதிக கோல்களை இரு அணிகளாலும் போட முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் அல்வாய் மனோகரா அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்