இரட்டையர் கரம் யாழ் மாவட்டம் வெண்கலம்
33வது தேசிய மட்ட இளைஞர் அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான கரம் இரட்டையர் ஆட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இலங்கையின் 33 தேசிய மட்ட கரம் போட்டிகள் நேற்றும், நேற்று முன்தினமும் கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் வெண்கலப் பதக்கத்திற்கான இரட்டையர் ஆட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து குருநாகல் மாவட்ட இளைஞர் அணி மோதியது.
இதில் யாழ் மாவட்ட அணி 25:0, 25:8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். யாழ் மாவட்ட இளைஞர் அணி சார்பில்
எஸ்.சதுர்சிகா, எல்.துஷாயினி ஆகியோர் கலந்து கொண்டனர்.