Fri. May 17th, 2024

இமையாணன் மத்தி, மனோகரா அணிகள் இன்று இறுதியில்

இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் இளையோர் வெற்றிக் கிண்ணத்தின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன் இறுதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா அணி மோதவுள்ளது.

விளையாட்டுக் கழகத் தலைவர் ந.கஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பா.முகுந்தன், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரும், வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் செயலாளருமான பா.முகுந்தன்,  பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் செயலாளர் அ.அருளானந்தசோதி,  வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடுவர் சங்கத் தலைவர் செ.சிவச்செல்வம், கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வெ.ஹரிஹரன்,  கரவெட்டி இளைஞர் சேவை உத்தியோகத்தர் சி.மயூரன்,  கெளரவ விருந்தினர்களாக இமையாணன் அ.த.க.பாடசாலை அதிபர் இ.சிவசங்கர்,  வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ஏ.பத்மஸ்ரீ, கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சி.ரூபாதரன், இமையாணன்  கிழக்கு கிராம அலுவலகர் சி.சிவநேசன், இமையாணன்  மேற்கு கிராம அலுவலகர் த.சுதர்சன்,  கரணவாய் மேற்கு கிராம அலுவலகர் கு.சசிகுமார், அல்வாய் கிராம அலுவலகர் நா.சிவதர்சன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்