இன்றைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை
வடமாகாணத்தில் இன்று (4) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 226 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.