இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பாண் விலை மேலும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
பாண் உற்பத்திக்கு தேவையான மா விலையை 17 ரூபாவினாலும் ஸ்பெசல் பாண் மற்றும் பணிஸ் வகைகளுக்கு தேவையான மா விலையை 23 ரூபாவினாலும் கோதுமை மா விநியோக நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. இதனால் 450g நிறையுடைய ஒரு இறாத்தல் பாணிண் விலையை பாணிஸ் விலையை 10 ரூபாவினாலும் பணிஸ் வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.