Mon. May 20th, 2024

இன்று திறக்கப்பட்ட நெல்லியடி சந்தை

19.01.2021.இன்று செவ்வாய்க்கிழமை நெல்லியடியில் அமைந்துள்ள புதிய சந்தை கொரோனால் தொற்றால் பூட்டப்பட்டிருந்த சந்தை  திறக்கப்பட்டது. தற்போது ஒருவழிப்பாதை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் இரண்டு கதவுகளும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. அதனால் வியாபாரிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறார்கள். சந்தை திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு சரிவரத் தெரியாத காரணத்தினால் சந்தைக்கு வரும் மக்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றார்கள். மீன் சந்தை 750 வீதியில் விற்பனை செய்யப்படுகின்றது. பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. மீன் வியாபாரிகளையும் உடனடியாக சந்தைக்குள் மீன் சந்தையில் விற்பனை சேவைக்கான ஒழுங்குகளை பிரதேசசபை நிர்வாகம் செய்து கொடுக்க கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்