Tue. May 21st, 2024

இங்கிலாந்து , பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் இருந்து விமானங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

இங்கிலாந்து , பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் இருந்து தொடங்கும் அனைத்து விமானங்களும் நாளை 2359 மணிநேரம் (இலங்கையில் உள்ளூர் நேரம்) முதல் இரண்டு வார காலத்திற்கு தடை செய்யப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
“அதன்படி, அனைத்து விமான நிறுவனங்களும் மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு விமானத்திலும் பயணிகளை ஏற்றவேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றன, மேற்கூறிய நாடுகளில் இருந்து அல்லது கடந்த 14 நாட்களுக்குள் அந்த நாடுகளுக்கு சென்ற எந்தவொரு பயணிகளும் இது பொருந்தும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளது .
ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்