ஆஷிகாவினால் புதிய சாதனை இன்று பதிவு
இலங்கை தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார் வடக்கின் சாதனை மங்கையாகிய செல்வி விஜயபாஸ்கர் ஆஷிகா.
இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட weightlifting control competition இன்று பொலநறுவையில் நடைபெற்றது. இதில் யாழ் பளுதூக்கும் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த விஜயபாஸ்கர் ஆஷிகா 71 கிலோ எடைப் பிரிவில் சினெச் முறையில் 77 நிறையையும், கிளீன் அன் ஜக் 95 முறையில் நிறையையும் ஒட்டு மொத்தமாக 172 கிலோ நிறையைத் தூக்கி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். கொவிட் 19 தொற்று காரணமாக வீரர்களின் பயிற்சிகள் மட்டுப்படுத்தபட்ட நிலையிலும் சாதனை மங்கையில் சாதனைப் பயணங்கள் தொடர்வதற்கு விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.