ஆவரங்கால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள்
’19 12 2019 அன்று ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற வாழ்வெட்டென கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது காயப்பட்ட நபர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸார் விசாரணை செய்தபோது அவரின் வாக்குமூலத்தின் படி வாக்குவாதம் ஏற்பட்டதால் மூவர் தன்மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தினார்கள் எனவாக்குமூலத்தில் கூறியுள்ளார். தற்பொழுது அச்சுவேலி பொலிசார் சந்தேக நபர்கள் மூவரையும் தேடிவருகிறார்கள் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.