Fri. May 17th, 2024

ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன்

அமரர்களான திருகுமரன்_லஜிதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தைச் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சுவீகரித்துக் கொண்டார்.
அளவெட்டி மத்தி விளையாடுக் கழக வீரர்களான அமரர்கள் திருகுமரன் -லஜிதன் ஞாபகார்தமாக நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழகமைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில் முதல் செற்றில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 27:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:21, 25:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ஆவரங்கால் மத்தி அணி வீரர் தர்சன்,
கவர்சிகரமான வீரராக ஆவரங்கால் மத்தி அணி வீரர் கவிசன்,
மக்கள் மனம் கவர்ந்த வீரராக ஆவரங்கால் மத்தி அணி வீரர் சுஜீவன்
தொடரின் சிறந்த இளம் வீரராக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வீரர் சஞ்சி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்