ஆவரங்காலில் விபத்து இருவர் படுகாயம்
ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டுவந்த கன்ரர் வாகனம் வீதியை விட்டு விலகி ரயர் கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. சாரதியின் நித்திரை தூக்கம் காரணமாகவே விபத்து இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.